சுமந்திரனும், ஜயம்பதியும் எமக்கு அறிவுரை கூறத் தேவையில்லை: அமைச்சர் மனோ கணேசன்

🕔 October 7, 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் மற்றும் ஜயம்பதி விக்ரமரட்ன ஆகியோர் எமக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, தங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களின் எதிர்பார்ப்புகளை வென்றெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் ஜயம்பதி விக்ரமரட்ன ஆகிய இருவரும், தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதை மறந்து, சட்டத்தரணிகள் என்பதை மாத்திரம் மனதில் கொண்டு செயற்படுகிறார்களா என்கிற சந்தேகம், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுந்துள்ளதாகவும் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே,தமக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களின் எதிர்பார்ப்புகளை வென்றெடுப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தனது பேஸ்புக் பதிவில் மனோ வலியுறுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்