பாலமுனை பள்ளிவாசலுக்கு, ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு

🕔 July 31, 2015

Palamunai - 01
– பி. முஹாஜிரீன் –

பாலமுனை ‘தானா அல் புஸைரி’ ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு, அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பு, ஒலி பெருக்கி சாதனங்ளை அன்பளிப்புச் செய்துள்ளது.

மேற்படி ஒலி பெருக்கி சாதனங்களைக் கையளிக்கும் வைபவம், நேற்று வியாழக்கிழமை ‘தானா அல் புஸைரி’ ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது. பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எஸ். லாஹீர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

கட்டாரில் தொழில் புரியும் – பாலமுனைப் பிரதேசத்தவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கும், அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ரி.ஏ. ஹூதைபிடம், பள்ளிவாயல் நிருவாக சபையினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய, இவ் ஒலி பெருக்கி சாதனங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இதேவேளை, அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பினால், பாலமுனை ‘தானா அல் புஸைரி’ ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு, இம்முறை ரமழான் மாதத்தில் – பொது மக்கள் நோன்பு துறப்பதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ளும் பொருட்டு, அண்மையில் – ஒரு லட்சம் ரூபாய் நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்