மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

🕔 August 15, 2017

– க. கிஷாந்தன் –

டொ
ரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில் சவுக்கு மரத்தில் இருந்து தவறிவீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.  இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

42 வயதுடைய 04 பிள்ளைகளின் தந்தையான எம். ஜெயரட்ணம் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபர் தனது மரக்கறி தோட்டத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்க மரக்குற்றிகளை வெட்டுவதற்கு சவுக்கு மரத்தின் உச்சியில் ஏறியுள்ளார். இந்த நிலையிலேயே தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்