விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய போது, அவர் இதனைக் கூறினார்.
“விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, நான் ஏன் ஆதரவளிக்க வேண்டும்” என கேள்வியெழுப்பிய மஹிந்த ராஜபக்ஷ; “விஜேதாச எனது பிரதேசத்தைச் சேர்ந்தவர்” என குறிப்பிட்டார்.
“அவர் உள்ளேயிருந்து போராட முடிந்தால், அதனை அவர் செய்யட்டும்” என்றும், முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
ஹம்பாந்தோட்ட மாவட்டத்தைச் சேர்ந்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.