வட மாகாண சுகாதார அமைச்சர் ராஜிநாமா
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை பிற்பகல், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து, வர்த்தக அமைச்சர் பி. டெனீஸ்வரன் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் மீதமுள்ளமையினால், மேற்படி இருவரையும் ஒரு மாதகாலம் விடுமுறையில் செல்லுமாறு, வட மாகாண முதலமைச்சர் கடந்த மாதம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பத்மநாதன் ஒரு மருத்துவருமாவார்.