ரவிக்கு இவ்வளவு பணம் வழங்கப்பட்டிருந்தால், ரணில் எவ்வளவு வாங்கியிருப்பார்: திகைக்க வைக்கும் உண்மைகள்
கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு வரி சலுகை பெற்றுக்கொள்வதற்காகவே, ரவி கருணாநாயக்கவுக்கு அலோசியஸ் மஹேந்திரன் வீட்டு வாடகையாக பணம் வழங்கியதாகவும், வீடு கொள்வனவு செய்ய பணம் வழங்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொமேஷ் பதிரன தெரிவித்தார்.
ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை கூறினார்.
பிணை முறியில் சிக்கியுள்ள அலோசியஸ் மஹேந்திரனிடமிருந்து சொகுசு வீடு ஒன்றுக்கு ரவி கருணாநாயக்க வாடகைப் பணம் பெற்றுக்கொண்டார் என, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை மூலம் தெளிவாகியுள்ளது என்று கூறிய அவர்; குறித்த பணம், பிணை முறிகளை பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டதாக கூறப்பட்ட போதும், அது கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு வரி சலுகை பெற்றுக் கொள்வதற்காகவே ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
ரவி கருனாநாயக்குவுக்கு இவ்வளவு பாரிய தொகை பணம் வழங்கப்பட்டிருந்தால், முறி மோசடியின் முக்கிய சூத்திரதாரி ரனில் விக்ரமசிங்கவுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ரொமேஷ் பதிரன கேள்வி எழுப்பியுள்ளார்.
(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)