ஜனாதிபதிக்கு நெருக்கமான சுமங்கள தேரர், ஞானசாரரைப் பாதுகாக்க களமிறங்கியது ஏன்; அம்பலமாகிறதா உண்மைகள்

🕔 June 22, 2017

– அ. அஹமட் –

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, நீதியமைச்சரை பயன்படுத்தி  ஞானசார தேரரை பாதுகாப்பதாக, அரசாங்க தரப்பை சேர்ந்த சிலர் பொய்யான  குற்றச்சாட்டை சுமத்தி வந்தனர். இந்த  நிலையில், ஞானசார தேரரை பாதுகாக்கின்றமையின் பின்னணியில், அரசாங்க தரப்பின் அனுசரணைகள் இருக்கின்றமை, மக்கள் மத்தியில் அம்பலமாகி வருகின்றது.

அறையில் ஆடியவர்கள் இன்று அம்பலத்தில் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நல்லாட்சி முக்கியஸ்தர்களின் முகத்திரைகள் தற்போது கிழிந்தவண்ணம் உள்ளன.

அந்த வகையில், ஞானசாரரை பிணையில் விடுவிப்பதற்கு, ஜனாதிபதிக்கு ஆலோசகர் போன்றுசெயற்படுபவரும் ஜனாதிபதிக்கு மிக மிக நெருக்கமாக இருப்பவரும், ஜனாதிபதியின் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டவருமான ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் உலப்பனே சுமங்கள தேரர் களமிறங்கியிருந்தார்.

மத்திய வங்கி ஊழல் மற்றும் கல்குடா மதுபானசாலை போன்றவற்றுக்கு எதிராக, குரல் கொடுத்த விடயங்களிலும், முன்னாள் ஜானாதிபதி காலத்து ஊழல் தொடர்பிலும் அதிக அக்கறை எடுத்து கொண்டுசெயற்பட்டுவந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியில் தலைவர் உலப்பனே சுமங்கள தேரர், கடந்த இரு வாரங்களாக ஞானசார தேரரை காப்பாற்ற கடும் பிரயத்தங்களை மேற்கொண்டிருந்ததோடு, நேற்று நீதிமன்றம் வரை வந்து, அவருக்கு ஆதரவாக களமிறங்கி அவரை பிணையில் எடுக்க முழு மூச்சுடன் செயற்பட்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக செயற்படும் சுமங்கள தேரர் போன்றவர்கள், ஞானசார தேரர் விடயத்தில் களமிறங்கியதும், ஞானசார தேரருக்கு வரலாற்றில் இல்லாத முறையில் நேற்றைய தினம், மிக மிக வேகமாக பிணை வழங்கப்பட்டிருந்த விடயமும், ஞானசார தேரரைப் பாதுகாப்பது ஜனாதிபதி தரப்பு என்கிற சந்தேகத்தை மக்கள் மத்தியில் மேலும் வலுவடையச் செய்துள்ளது.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்