சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபையிர் நியமிக்கப்பட்டமை குறித்து, ஹிஸ்புல்லா மகிழ்ச்சி

🕔 April 24, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் நியமிக்கப்பட்டுள்ளமையானது, அந்தக் கட்சிக்கு நன்மைகளை ஈட்டித்தரும் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்குடன், கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர்  பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 07 புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் – ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மட்டக்களப்பு மாவட்டத்தில் துடிப்பான இளம் அரசியல் வாதியான எம்.எஸ். சுபையிர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை கட்சிக்கு பல நன்மைகளை ஈட்டித்தரும்.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக கடந்த காலங்களில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டும் சிறுபான்மை சமூகம் தூரமானது.

ஆனால், இன்று அந்நிலை மாறி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புக்களுக்கு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்