மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்

🕔 February 12, 2017

Dead body - 011– எப்.முபாரக்- 

மூதூர் கடலுக்கு கடந்த வியாழக்கிழமையன்று தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் 01 – பஹ்ரியா நகரைச் சேர்ந்த லத்தீப் பஸ்ரி என்ற 29 வயதுடைய மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரைத் தேடும் பணியில் கிராம மக்களும் கடற்படையினரும் இணைந்து செயற்பட்டிருந்தனர்.

ஜனாஸா நல்லடக்கம் அக்கரைச்சேனை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்