சாய்ந்தமருது பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபையிலிருந்து, பொறியியலாளர் சாஹிர் ராஜிநாமா 0
– மப்றூக் –சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கான விசேட நம்பிக்கையாளர் சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவர் இன்று வியாழக்கிழமை தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்டடத் திணைக்களத்தின் கல்முனை அலுவலக பிரதம பொறியியலாளரும், சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவருமான ஏ.எம். சாஹிர் என்பவரே இவ்வாறு தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.