சு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் கம்பனிக்கு, அரச வங்கியில் பெருந்தொகை சலுகைக் கடன்: எழுகிறது எதிர்ப்பு

🕔 July 30, 2018

ரசியல் தொடர்புகளைக் கொண்ட 05 கம்பனிகளுக்கு, அரச வங்கியொன்று மிகப்பெரும் பணத் தொகையினை சலுகை அடிப்படையில் கடனாக வழங்கவுள்ளதாகத் தெரியவருகிறது.

அரசாங்கத்திலிருந்து பிரிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருடைய கம்பனியும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேற்படி கம்பனிகளுக்கு நியாயமற்ற வகையில் இவ்வாறான பெருந்தொகைக் கடனை வழங்கவுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு, குறித்த வங்கியின் தலைவர் மற்றும் பணிப்பாளர்களை வங்கியின் சபை கோரியுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்