கோட்டாவை கைது செய்வதற்கான, இடைக்காலத் தடை நீடிப்பு
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இந்தத் தடையினை நீடிக்கும் உத்தரவை வழங்கியது.
கோட்டாபய ராஜபக்ஷவை மார்ச் 23ஆம் திகதி வரை கைது செய்வதற்கு இந்த உத்தரவின் மூலம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.