குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல்

🕔 May 21, 2017

குருணாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளிவாசல் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாககத் தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோல் குண்டுகளை வீசி, இன்று அதிகாலை 03:30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்ட போதிலும், அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளது.

தாக்குதலை நடத்தியவர்களில் ஆகக்குறைந்தது 06 பேர் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசலின் கண்ணாடிகள் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்