தொழில் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கிய முன்னாள் பிரதியமைச்சருக்கு 04 ஆண்டுகள் சிறைத் தண்டனை 0
அரச தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்ட, முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரட்னவுக்கு 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரணசிங்க இந்த தீர்ப்பினை நேற்று வியாழக்கிழமை வழங்கினார். இதேவேளை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அந்த