பாடசாலைக்கு அருகில் குப்பை; அப்புறப்படுத்த முடியாது என்கிறார், கல்முனை மாநகரசபை ஆணையாளர் 0
– எஸ்.அஷ்ரப்கான் – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது ‘லீடர் அஷ்ரப்’ வித்தியாலயத்தின் அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால், குறித்த பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினை எதிர்நோக்குவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பாடசாலை அருகில் பாரியளவு குப்பைகள் கொட்டப்படுவதால், மேற்படி பாடசாலை மாணவர்கள் கடுமையான அசேளகரியங்களுக்கு உட்படுவதோடு, நோய்த் தாக்கங்களுக்குட்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும்