அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில் 0
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கும் சட்ட மூலம் எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க பாரிய பங்ளிப்பை செய்ததாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றியபோதே, பிரதமர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.