முஸாதிகாவின் வீடு சென்று வாழ்த்துச் சொன்ன கிழக்கு ஆளுநர்; மடிக்கணிணி அன்பளிப்பு 0
– றிசாத் ஏ காதர் – அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம் பெற்று மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவி முஸாதிகா வீட்டுக்கு இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத் சென்றிருந்தார். இதன் போது முஸாதிகா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு தனது ஆளுநர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தார்.