பட்டுப் பாதையும், முத்து மாலையும்: சீனாவின் பிடிக்குள், இலங்கை சிக்கிக் கொண்ட கதை 0
– ஏ.என். நஸ்லின் நஸ்ஹத் (உதவி விரிவுரையாளர்) –இலங்கையில் அதிகளவான முதலீடுகளை செய்யும் நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தினைப் பிடித்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் பன்னெடுங்காலமாகவே அரசியல், ராஜதந்திர உறவுகள் நிலவிவருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதை அபிவிருத்திகள் மற்றும் துறைமுக நகரம் போன்ற பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.