மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்ய, நீதிமன்றம் தடை உத்தரவு 0
மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதை தவிர்க்குமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறுகோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (28) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் அகில