மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் அகற்றப்படவுள்ளது; அமைச்சர் ஹரிசன் 0
ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லினை அகற்றவுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்தார். எதிர்வரும் வியாழக்கிழமை முதல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டமையினால், கடந்த காலங்களில் மத்தளை விமான நிலையத்தில் நெல்லினை களஞ்சியப்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பாரிய சர்ச்சைகள்