கல்ஹின்னை பள்ளிவாசல் மீது, இனவாதத் தாக்குதல் 0
கண்டி மாவட்டம் கல்ஹின்னை – பெபிலிகொல்ல பள்ளிவாசல் மீது, நேற்று வியாழக்கிழமை இரவு, கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இதேவேளை, வீடுகள் மீதும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கல்ஹின்னை பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, போதையில் வந்த சிங்கள இளைஞர்கள், முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.