சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத் 0
– முன்சிப் அஹமட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பௌத்த மகாநாயக்கர்கள் மத்தியஸ்தம் வகித்து, இருவருக்குமிடையில் உடன்பாடொன்றினை ஏற்படுத்தலாம் என்றும், இதன் மூலம் சிங்கள அரசியல் கூட்டிணைவதற்கான வாய்ப்பு உள்ளதென்றும் மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எனவே, சின்னாபின்னமாகிக் கிடக்கும் முஸ்லிம் அரசியலும் கூட்டிணைய வேண்டிய அவசியம்