நாட்டில் இனவாத நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன: பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை 0
இனவாதப் பிரச்சினைகளைத் தூண்டுவதற்கு அல்லது அதனை ஒத்த நோக்கங்களுடன் செயல்பட முயற்சிக்கும் நபர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தத் தயங்கமாட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன்; நாட்டில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுவதாக