சேதமடைந்த நாணயத்தாள்களை, வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு அறிவிப்பு 0
அடுத்த வருடத்திலிருந்து சேதமடைந்த நாணயத் தாள்களுக்கு, அதன் பெறுமதிக்குரிய மாற்றுப் பணத்தினை வழங்கும் நடைமுறையை, இலங்கை மத்திய வங்கி நிறுத்திக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாணயத் தாள்களை சேதப்படுத்தல், அதில் மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றாக கருதப்படும். அவ்வாறான செயற்பாடுகளுக்காக சிறைதண்டனை, அபராதம்