பாலமுனை வைத்தியசாலை விவகாரம்: பணியாளர்கள் சிலரின் அச்சுறுத்தல் காரணமாகவே, இரவில் கடமை செய்ய முடியவில்லை: டொக்டர் சமூன் 0
– மப்றூக் – பாலமுனை வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர் உள்ளிட்ட மூன்று பணியாளர்கள், தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், அவர்கள் மீதான அச்சம் காரணமாகவே, இரவு நேர கடமையில் தன்னால் ஈடுபட முடியவில்லை எனவும் பாலமுனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் எம்.ஐ. சமூன், ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். மேலும், கடந்த மாதம் பாலமுனையில் வைத்தியசாலை பணியாளர்களுக்கு