கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு 0
– எம்.வை. அமீர் – கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சுவர்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் நேற்று வெள்ளிக்கிழமை சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து, ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கல்முனைப் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்தனர். மேலும், சிலைகளை சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை, ஆலயத்தின் குருக்கள் அடையாளம் காட்டியமையினை அடுத்து, குறித்த நபரை