காத்தான்குடி வரவேற்பு வளைவிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்ற, மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம் 0
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்டபிரதேசங்களிலுள்ள பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்துதல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் போன்றவற்றுக்கான பிரேரணைகள் மட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதே, இந்த பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டது. மேயர் ரி. சரவணபவன் தலைமையில் இந்த அமர்வு இடம்பெற்றது.