யாழ்ப்பாண பயணியின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையே, ராணுவத்தினர் பயணித்த பஸ், தீப் பிடிக்க காரணமாகும்: பிரதமர் சபையில் தெரிவிப்பு 0
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயணியொருவரின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையினாலேயே, கஹகொல்ல பகுதியில் – ராணுவத்தினர் பயணித்த பஸ் வண்டி தீப்பிடித்து எரிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று புதன்கிழமை சபையில் கோரிக்கை விடுத்திருந்தார்.