‘கடமை நிறைவேற்று அதிபர்’ விவகாரம்; அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் அநீதி: பணிப்பாளர் கவனிப்பாரா? 0
– அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதிபர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பலர் இருக்கத்தக்கதாக, சில பாடசாலைகளுக்கு ‘கடமை நிறைவேற்று அதிபர்களாக’ ஆசியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து புகார்கள் எழுந்துள்ளன. அதிபர் தரப் பரீட்சைகளில் சித்தியடைந்து, பாடசாலைகளில் அதிபர்களாகக் கடமையாற்றுவதற்கான தகைமை உள்ளவர்கள் பலர், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ளனர். ஆயினும், அங்கு அதிபர்கள் வெற்றிடமுள்ள