வடக்கு கிழக்கு இணையக் கூடாது, புதிய மாவட்டம் வேண்டும் என்பனவற்றை உள்ளடக்கி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கொள்கை பிரகடனம் வெளியீடு 0
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து, உருவாக்கியுள்ள ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்’ கொள்கைப் பிரகடனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கோடு, பின்வரும்