கொகெய்ன் உருண்டைகளை விழுங்கி வந்த பெண், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 0
கொகெய்ன் போதைப்பொருள் அடங்கிய உருண்டைகளை விழுங்கி இலங்கை வந்த உகண்டா பெண்ணொருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உகண்டாவிலிருந்து இன்று (15) பிற்பகல் இலங்கைக்கு வந்த 45 வயதுடைய குறித்த பெண்ணை – கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது அவர் விழுங்கிய கொகெய்ன் அடங்கிய 51 உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளன