உகண்டா செல்வதற்கான யோசிதவின் கோரிக்கை நிராகரிப்பு
யோஷித ராஜபக்ஷ – உகண்டாவுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை கடுவலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உகண்டா புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில், தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அவருடன் உகண்டா செல்வதற்கான அனுமதியினை வழங்குமாறும் கோரி, யோஷிதவின் சட்டத்தரணிகள் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், மேற்படி மனுவை நிராகரித்த கடுவலை நீதிவான் நீதிமன்றம், குறித்த மனுவை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் யோஷித ராஜபக் ஷ கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.