இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing): வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் மீள்குடியேற்றமும் 0
(கட்டுரையாளர் எம்.எம். பாஸில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை விரிவுரையாளராவார்) வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்டமையை தெளிவுபடுத்தும் முயற்சியாக இச்சிறு கட்டுரை எழுதப்படுகின்றது. இவர்களை மீளக்குடியமர்த்துவதிலுள்ள சவால்கள், பின்பற்றப்பட வேண்டிய உபாயங்கள் என்பன குறித்து இந்த கட்டுரை வலியுறுத்துகின்றது. உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோர் கெடுடி யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேசச் சூழலில் உள்நாட்டு மோதல்கள் மற்றும் உள்நாட்டு யுத்தங்கள் அதிகரித்தன.