அட்டாளைச்சேனையில் பகட்டு அரசியல்; அடுத்தவரின் சேவையை சொந்தம் கொண்டாடும் முயற்சி 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, உள்ளுர் அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடுவதில் இழுபறியும், போட்டியும் நிலவிவரும் நிலையில், மக்கள் இந்த நடவடிக்கை குறித்து தமது அதிருப்திகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். தாங்கள் செய்யாத, தங்களுக்குச் சொந்தமில்லாத அபிவிருத்தி நடவடிக்கைகளை, தாங்கள் செய்வதாகக் காட்டிக்கொள்ளும் பகட்டு அரசியல் – வெட்கக் கேடான விடயம் என்றும்