கடமையில் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி மரணம் 0
கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கடமை நேரத்தில் இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். காலி முகத்திடல் பகுதியில் பணியில் இருந்த வேளையிலேயே அவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது. உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், சடலம் மீது பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை ஆகியவை இடம்பெறவுள்ளன.