Back to homepage

பிரதான செய்திகள்

சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின

சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின 0

🕔18.Sep 2019

– முன்ஸிப் அஹமட் – சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவற்றினை, அம்பாறை மாவட்டம் பாலமுனை பகுதியிலுள்ள வளவொன்றிலிருந்து இன்று புதன்கிழமை காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ரி56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குத் தேவையான ரவைகள் 23, டெட்டனேற்றர் குச்சிகள் – 07, யூரியா – 02 கிலோ உள்ளிட்ட பொருட்களே

மேலும்...
சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல்

சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல் 0

🕔17.Sep 2019

மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது, கடந்த ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது

மேலும்...
வேறு கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபந்து செல்ல மாட்டேன்: ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ

வேறு கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபந்து செல்ல மாட்டேன்: ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ 0

🕔17.Sep 2019

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்க வேண்டும் என்பதற்காக, வேறு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன் என்று, ஐ.தே.க. பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமவீரவின் இல்லத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய

மேலும்...
தாமரைக் கோபுரம்: சுவாரசிய தகவல்கள்; வேகமாக உயரும் மின்தூக்கிகள் இங்குதான் உள்ளன

தாமரைக் கோபுரம்: சுவாரசிய தகவல்கள்; வேகமாக உயரும் மின்தூக்கிகள் இங்குதான் உள்ளன 0

🕔16.Sep 2019

கொழும்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் சிலவற்றை வழங்குகின்றோம். 01) இந்த கோபுரம் 08 மின்தூக்கிகளை கொண்டது. இவை நொடிக்கு 07 மீட்டர் உயரும். இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கி (லிஃப்ற்இவைதான். 02) கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600 சதுர அடியாகும். சுமார் 1500 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதி உள்ளது.

மேலும்...
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு 0

🕔16.Sep 2019

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான கோரிக்கை ஆவணம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, அந்த வங்கியின் முன்னாள் ஆளுநர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். இந்த

மேலும்...
தாமரை கோபுர நிர்மாணத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் முற்பணம் அபேஸ்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

தாமரை கோபுர நிர்மாணத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் முற்பணம் அபேஸ்: ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔16.Sep 2019

தாமரை கோபுர நிர்மாணத்துக்காக இலங்கை அரசு முற்பணமாக வழங்கிய 200 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு விட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். குறித்த கோபுரத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே, இந்தத் தகவலை அவர் கூறினார் இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; “சீனாவின் பெய்ஜிங் நகரில் அலிட் எனும் நிறுவனத்துக்கு

மேலும்...
தெற்காசியாவில் உயரமான தாமரைக் கோபுரத்தை, ஜனாதிபதி திறந்து வைத்தார்

தெற்காசியாவில் உயரமான தாமரைக் கோபுரத்தை, ஜனாதிபதி திறந்து வைத்தார் 0

🕔16.Sep 2019

– பாறுக் ஷிஹான் – தெற்காசியாவில் மிகவும் உயரமான கோபுரமாகக் கருதப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 356 மீற்றர் உயரமான இந்த தாமரைக் கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தில் 1878 கோடி ரூபாய்) செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் அலைவரிசை

மேலும்...
ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம்

ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம் 0

🕔16.Sep 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முற்பகல் சாட்சியமளித்துள்ளார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் ஆஜரானார். அங்கு அவர் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் வௌியேறியுள்ளதாகத்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு 0

🕔16.Sep 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிடுமாறு அரசியல் கட்சியொன்று தமக்கு அழுத்தம் விடுத்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். திங்கட்கிழமை (இன்று) ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் அதிகாரம் தமக்கு உள்ள போதும், தாம் அதனைச் செய்யப்

மேலும்...
எவ்வகையான தடை ஏற்படுத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: சஜித் பிரேமதாஸ

எவ்வகையான தடை ஏற்படுத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: சஜித் பிரேமதாஸ 0

🕔16.Sep 2019

யார் எதனைக் கூறினாலும், யார் எவ்வகையான தடைகளை ஏற்படுத்தினாலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன் என்று, ஐ.தே.கட்சி பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; எனது பெயர் முன்வைக்கப்பட்டவுடன் அரசியல் களத்தில்

மேலும்...
அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள்

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள் 0

🕔16.Sep 2019

– சுஐப்.எம். காசிம் – (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் நினைவு தினம் இன்றாகும்) முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைமையின் இழப்பிலிருந்து இன்றைய நாளில் (16) சில நினைவுகள் உயிர்ப்படைகின்றன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயம் இற்றைக்கு நான்கு தசாப்தங்களைத் தொட்டு நிற்கின்றது. நிறைவேற்று

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது 0

🕔14.Sep 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை இம் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கு அமைய, கடந்த 10ஆம் திகதி தொடக்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகள் தமது வேட்பாளர்களைக்

மேலும்...
கஞ்சிப்பானை இம்ரான் பூஸா சிறைச்சாலையில் உண்ணா விரதம்

கஞ்சிப்பானை இம்ரான் பூஸா சிறைச்சாலையில் உண்ணா விரதம் 0

🕔14.Sep 2019

பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள உலக புள்ளி கஞ்சிப்பானை இம்ரான் உண்ணாவிரத நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உணவுப் பொதிக்குள் தொலைபேசிகளை மறைத்து வைத்து, கஞ்சிப்பானை இம்ரானுக்கு கொடுப்பதற்கு முற்பட்டபோது கைதான தனது தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரியே குறித்த உண்ணாவிரத நடவடிக்கையை அவர் ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. மாகந்துர மதுஷின் சகாவான கஞ்சிப்பான இம்ரான்

மேலும்...
சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார்

சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார் 0

🕔13.Sep 2019

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன், ஐ.தே.க. பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாளை சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைர் அமைச்சர் றிஷாட் பதியூதீன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர்

மேலும்...
மன்னார் மாவட்டத்திலே  எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம்

மன்னார் மாவட்டத்திலே எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம் 0

🕔13.Sep 2019

கிராமங்களின் வளர்ச்சியும், பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்தந்த கிராமங்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் தங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் 75வது வருட பவளவிழாவும் நூர்தீன் மஷூர் பார்வையாளர் அரங்கு அங்குரார்ப்பணமும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் றிஷாட் விசேட அதிதியாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்