வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கையெழுத்து வேட்டை
🕔 June 12, 2015



– அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம். றம்ஸான் –
வட மாகாண முஸ்லிம்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்திடும் நடவடிக்கை, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து – அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் இடம்பெற்றது.
இதற்கமைவாக, கல்முனை முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் – பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் – மிகவும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு, இந் நடவடிக்கைக்கு பங்களிப்புச் செய்தனர்.


Comments



