சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி
தனது சகோதரன் யோசித ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவருடன் செல்ஃபி ஒன்றியை எடுத்து, அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, தனது சகோதரர் நல்ல படியாக வீடு திரும்பியுள்ளதாகவும், அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 44 நாட்களும், தமக்கு ஆதவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், நாமல் ராஜபக்ஷ தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, யோசித பிணையில் விடுவிக்கப்பட்டபோது நீதிமன்ற வளாகத்துக்கு அவரின் சிறிய தந்தை பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.