
மாகாண சபை முறைமையை தொடரவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (03) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
தற்போது நடைமுறையிலுள்ள மாகாண சபை நடைமுறையில் எதனையும் கூட்டவோ, குறைக்கவோ முயற்சிக்காமல், இருப்பதை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்னும் மூன்று ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என இதன் போது மேலும் தெரிவித்த அவர், அதுவரை தற்போதுள்ள மாகாண சபை நடைமுறை தொடரும் என உறுதியளித்தார்.



