25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது

🕔 July 4, 2024

ஹாபாகே பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் லஞ்சம் பெற்றுக் கொண்ட போது, அவரை லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.

வங்கியிலிருந்து திரும்பிய இரண்டு காசோலைகள் தொடர்பாக வத்தளை – பள்ளியாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து, திரும்மிய காசோலைகளுக்குரிய தொகைகளை தவணை முறையில் உரியவரிடமிருந்து பெற்றுத் தருவதாக சந்தேக நபர் உறுதியளித்துள்ளார். இதற்காகவே முறைப்பாட்டாளரிடம் லஞ்சம் கோரப்பட்டுள்ளது.

வெலிசர பொருளாதார மத்திய நிலையத்துக்கு செல்லும் வழியில் நேற்று (03) மாலை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள், குறித்த பொலிஸ் பரிசோதகரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்