மஹிந்த கஹந்தகம: அரகலயில் அடிபட்டவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

🕔 July 3, 2024

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளார்.

அரகலய எனும் மக்கள் போராட்டம் இடம்பெற்ற போது, 2022 மே 09 ஆம் திகதி நடந்த தாக்குதலில் மஹிந்த கஹந்தகம தாக்குதலுக்குள்ளாகியிருந்தார்.

அது தொடர்பான படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பித்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட மஹிந்த கஹந்தகம, அந்தக் கட்சியின் மத்திய கொழும்புத் தொகுதியின் வலய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்