மோசமான காலநிலையினால் 32 பேர் உயிரிழப்பு: சுமார் 06 ஆயிரம் வீடுகள் சேதம்

🕔 June 7, 2024

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

1,973 பாதுகாப்பான இடங்களில் 7,639 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீரற்ற வானிலை  காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்