அனைத்துப் பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

🕔 June 2, 2024

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (03) திங்கட்கிழமை மூடப்படும் என கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான மழை மற்றும் வெள்ளம் – பல்வேறு பிராந்தியங்களை பாதித்துள்ளமையினால், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பாடசாலைகளை மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நேற்றும் இன்றும் நாட்டில் பலர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்