“கடலுக்குச் செல்ல வேண்டாம்”

🕔 May 28, 2024

மீனவர்கள் மறு அறிவித்தல் வரை – நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மேற்படி அறிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகக் கொந்தளிப்பாகவும், மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் 2.5 மீற்றர் தொடக்கம் 3.0 மீற்றர் உயரம் வரை (இது நிலப்பரப்புக்கானது அல்ல) அலைகள் எழலாம்.

கல்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அண்மித்த கரையோர கடற்பரப்புகளில் கடல் அலைகள் கடுமையாக எழும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

எனவே, இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால கணிப்புகள் தொடர்பில் – அவதானமாக இருக்குமாறு மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்