50 வயது பெண்ணை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சாஜன்ட் கைது

🕔 May 22, 2024

பொலிஸ் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் – பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய பொலிஸ் நிலைய வளாகத்துக்குள் சிற்றுண்டிச்சாலையை நடத்தும் ஐம்பது வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்ள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்