வேண்டுகோளை கவனத்திற் கொண்டமைக்கு இம்ரான் எம்.பி, பரீட்சைகள் ஆணையாளருக்கு நன்றி தெரிவிப்பு

🕔 April 22, 2024

ன்னுடைய வேண்டுகோளை கவனத்திற் கொண்டு – திருகோணமலை மாவட்ட மாணவர்களின் பரீட்சை தொடர்பான விசாரணையை, அந்த மாவட்டத்திலேயே நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள – பரீட்சை ஆணையாளருக்கு, திருகோணமலை மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நன்றி தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரை – பரீட்சை தொடர்பான விசாரணைக்கு கொழும்புக்கு வருமாறு, பரீட்சை ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் பொருளாதார நெருக்கடி மிக்க இக்காலத்தில் – பெற்றோர் தமது பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்துச் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன.

எனவே, இந்த விடயத்தை இம்ரான் எம்.பி பரீட்சைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனை கவனத்தில் கொண்ட ஆணையாளர், குறித்த மாணவிகளின் கொழும்பு விசாரணையை ரத்து செய்து, அதனை திருகோணமலையில் நடத்த ஒழுங்கு செய்துள்ளார். இதற்காக இம்ரான் எம்.பி பரீட்சை ஆணையாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 71 பேர் இம்முறை சென் ஜோசப் கல்லூரி பரீட்சை நிலையத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தொற்றினர்.

இவர்களில் 70 பேருக்கு விசாரணை அழைப்பு கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும் விசாரணைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்