இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு

🕔 April 7, 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 20 கிலோகிராம்அரிசி வழங்குவதற்கு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான அரிசிப் பொதிகள் விநியோகம், பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.

‘அஸ்வெசும’ பயனாளிகள், நலன்புரி திட்டத்துக்காக மேன்முறையீடு செய்தவர்களில் நலன்புரிப் பலன்கள் சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள், ‘அஸ்வெசும’ பலன்களுக்குத் தகுதியில்லாத சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தி, அஸ்செசும மற்றும் கொடுப்பனவுகள் பெறாத முதியோர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் நாட்பட்ட நோயாளர்களுக்கு இந்த அரிசிப்பொதி விநியோகிக்கப்படும்.

இதேவேளை, தேவையான 54,800 மெற்றிக் தொன் அரிசியை விநியோகஸ்தர்களிடமிருந்து – மாவட்ட செயலாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் எனவும், அதற்கான நிதி ஏற்பாடுகளை திறைசேரி ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments