ஒக்டோபர் 17க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க தவிசாளர் தெரிவிப்பு

🕔 March 26, 2024

னாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர சந்திப்பொன்றின் போது, பொதுத் தேர்தலா – ஜனாதிபதி தேர்தலா முதலில் நடைபெறும் என கேட்கப்பட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று, இந்த வருடம் ஆரம்பமாகும் போதே அறிவித்தோமல்லவா எனவும் அவர் கூறினார்.

“பஸில் கூறுகிறாரே” என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு,

“ஒவ்வொருவரும் கூறும் விடயங்கள் தேவையில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் – பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென, பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தி வரும் நிலையில், ஐ.தே.கட்சி தவிசாளர் இதனைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்