28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் அரிசி வழங்கத் திட்டம்
குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசியும், மே மாததத்தில் 10 கிலோ அரசியும் வழங்கப்படவுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 10 கிலோ கிராம் அரிசியும், எஞ்சிய 10 கிலோ கிராம் அரிசி மே மாத முதல் வாரத்திற்குள்ளும் வழங்கப்படும்.
இந்த நிவாரணத் திட்டத்தின் மூலம் – குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மட்டுமின்றி, விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் சில நன்மைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.