இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் அங்கிகாரம்

🕔 March 21, 2024

மூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையழுத்திட்டுள்ளார்.

இந்த இரண்டு சட்டமூலங்களும் நேற்று (மார்ச் 20) சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்றன என்று, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இரண்டு சட்டமூலங்களும் 2024 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமாக நேற்று நடைமுறைக்கு வந்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்